மும்பை அந்தேரி பகுதியில் உள்ள அபார்ட்மெண்டை ரூ. 17 கோடிக்கு விற்பனை செய்துள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்.
2017-ல் மும்பை அந்தேரியில் 9-வது மாடியில் உள்ள 2,830 சதுர அடி அபார்ட்மெண்டை ரூ. 14.15 கோடிக்கு வாங்கினார் ஹர்பஜன் சிங்.
இந்நிலையில் அந்த அபார்ட்மெண்டை ரூ. 17.58 கோடிக்கு ஒரு வாரத்துக்கு முன்பு ஹர்பஜன் சிங் விற்பனை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபகாலமாக மும்பையில் சொகுசு அபார்ட்மெண்ட்களை வாங்குபவர்கள் அதிகமாகி விட்டதாகவும் அதனால் விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தனது அபார்ட்மெண்டை நல்ல விலைக்கு ஹர்பஜன் விற்றுவிட்டதாகத் தெரிகிறது.
ஹர்பஜன் சிங் - நடிகை கீதா பஸ்ரா ஆகிய இருவரும் 2015-ல் காதல் திருமணம் செய்துகொண்டார்கள். இத்தம்பதியருக்கு 2016-ல் மகளும் இந்த வருட ஜூலை மாதம் ஆண் குழந்தையும் பிறந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணி அறிவிப்பு!

நீதிக் கதைகள்! தங்க தூண்டில் பரிசு!

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்! இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!
விடியோக்கள்

தலைமைச் செயலகம் இடமாற்றம் எப்போது?| Tamil Nadu Secretariat | Fort St. George |TN Assembly | TVK Government | CM Vijay



