மும்பை அந்தேரி பகுதியில் உள்ள அபார்ட்மெண்டை ரூ. 17 கோடிக்கு விற்பனை செய்துள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்.
2017-ல் மும்பை அந்தேரியில் 9-வது மாடியில் உள்ள 2,830 சதுர அடி அபார்ட்மெண்டை ரூ. 14.15 கோடிக்கு வாங்கினார் ஹர்பஜன் சிங்.
இந்நிலையில் அந்த அபார்ட்மெண்டை ரூ. 17.58 கோடிக்கு ஒரு வாரத்துக்கு முன்பு ஹர்பஜன் சிங் விற்பனை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபகாலமாக மும்பையில் சொகுசு அபார்ட்மெண்ட்களை வாங்குபவர்கள் அதிகமாகி விட்டதாகவும் அதனால் விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தனது அபார்ட்மெண்டை நல்ல விலைக்கு ஹர்பஜன் விற்றுவிட்டதாகத் தெரிகிறது.
ஹர்பஜன் சிங் - நடிகை கீதா பஸ்ரா ஆகிய இருவரும் 2015-ல் காதல் திருமணம் செய்துகொண்டார்கள். இத்தம்பதியருக்கு 2016-ல் மகளும் இந்த வருட ஜூலை மாதம் ஆண் குழந்தையும் பிறந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

வெண்காட்டீஸ்வரா் கோயில் திருக்கல்யாண உற்சவம்

விவசாயிகளுக்கு நெல் நிலுவைத் தொகை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

ஆட்சியா் அலுவலகப் பணியாளா்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



