ஐபிஎல் போட்டியில் அதிவேகமாகப் பந்துவீசி கவனம் பெற்ற இளம் வீரர் உம்ரான் மாலிக், சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டிக்கான ஜம்மு - காஷ்மீர் அணியில் இடம்பெற்றுள்ளார்.
சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டி நவம்பர் 4 அன்று தொடங்கி நவம்பர் 22-ல் நிறைவுபெறுகிறது. இப்போட்டிக்கான ஜம்மு - காஷ்மீர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2021 போட்டியில் மணிக்கு 150 கி.மீ.க்கும் அதிகமாகப் பந்துவீசி கவனம் ஈர்த்தார் ஓர் இளம் இந்தியப் பந்துவீச்சாளர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடிய ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரைச் சேர்ந்த 21 வயது உம்ரான் மாலிக், ஆர்சிபி அணிக்கு எதிராக மணிக்கு 152.95 கி.மீ வேகத்தில் பந்துவீசினார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் 2-வது அதிவேகப் பந்துவீச்சு அதுதான். (முதல் இடம் ஃபெர்குசனுக்கு - 153.63 கி.மீ.)
கரோனாவால் பாதிக்கப்பட்ட நடராஜனுக்குப் பதிலாக சன்ரைசர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார் உம்ரான் மாலிக். முதல் ஐபிஎல் ஆட்டத்திலேயே 151.03 கி.மீ வேகத்துக்குப் பந்துவீசி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். 2-வது ஆட்டத்தில் இன்னும் அதிகவேகமாகப் பந்துவீசி, ஐபிஎல் 2021 போட்டியில் வேகமாகப் பந்துவீசிய வீரர்களில் ஒருவர் என்கிற பெருமையைப் பெற்றார். ஐபிஎல் 2021 போட்டியின் அதிவேகப் பந்துவீச்சுப் பட்டியலில் முதல் 8 இடங்களில் 4 இடங்களை உம்ரான் மாலிக் பிடித்தார். 3 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எகானமி - 8.00.
இந்நிலையில் சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டிக்கான ஜம்மு - காஷ்மீர் அணியில் சன்ரைசர்ஸ் வீரர்களான அப்துல் சமத்தும் உம்ரான் மாலிக்கும் இடம்பெற்றுள்ளார்கள். துணை கேப்டனாக அப்துல் சமத் தேர்வாகியுள்ளார். உம்ரான் மாலிக், ஜம்மு - காஷ்மீர் அணியில் இடம்பெற்றுள்ளதால் அவருடைய பந்துவீச்சு உள்ளூர் போட்டியில் எப்படி இருக்கும் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கவுள்ளார்கள். டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியில் வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளராக உம்ரான் மாலிக் தற்போது செயல்பட்டு வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இன்றைய செய்திகள் ஜூலை 27 - நேரலை

இ20 மக்கள் கட்சிக்கு பெருகும் ஆதரவு! 3 லட்சத்தைக் கடந்த ஃபாலோவர்ஸ்!

தங்கப் பதக்கம் வென்ற பின் அழுதது ஏன்? மனம் திறந்த மீராபாய் சானு!
விடியோக்கள்

தவெக அரசின் முதல் பட்ஜெட்: மதுரை மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன? | Budget | TN Budget |



