

காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தேர்வானது.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய மகளிர் அணி 164 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஸ்மிரிதி மந்தனா 32 பந்துகளில் 61 ரன்களும் ஜெமிமா 44 ரன்களும் எடுத்தனர்.
அடுத்து ஆடிய இங்கிலாந்து மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 160 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக வியாட் 35 ரன்களை எடுத்தார். அமி ஜோன்ஸ் 31 ரன்களும், நடாலியா சிவேர் 41 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் ஸ்நேகா 2 விக்கெட்டுகளும் தீப்தி 1 விக்கெட்டும் எடுத்தார். 3 ரன் அவுட் செய்து இந்திய மகளிர் அணி அசத்தினர்.
வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளது. இறுதிப் போட்டி ஞாயிற்றுக் கிழமை (ஆக. 7) எட்ஜ்பாட்ஸனில் நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.