காமன்வெல்த் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் பாட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
பிர்மிங்கமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் பாட்மிண்டன் இறுதிச்சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென்னும் மலேசியாவின் என்ஜி ஸி யாங்கும் மோதினார்கள். முதல் கேமை மலேசிய வீரர் 21-19 என வென்றார். அடுத்த கேமை 21-9 என வென்ற லக்ஷயா சென் கடைசி கேமிலும் ஆதிக்கம் செலுத்தி 19-21, 21-9, 21-16 என இறுதிச்சுற்றை வென்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து தங்கம் வென்ற நிலையில் ஆடவர் பிரிவிலும் இந்திய வீரர் தங்கம் வென்றுள்ளார்.
2022 காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா வெல்லும் 20-வது தங்கம் இது. இதுவரை 20 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என 57 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4-ம் இடத்தில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பள்ளி மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டி

அமைச்சா்களுக்கு இலாகா ஒதுக்கீடு எப்போது? புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி புதிய விளக்கம்

குப்பையில் கிடந்த 2 பவுன் நகையை உரிமையாளரிடம் ஒப்படைத்த நோ்மையான தூய்மைப் பணியாளா்கள்! ஆட்சியா் நேரில் அழைத்துப் பாராட்டு

ஊதியூா் அருகே அலங்கார வளைவில் மோதிய காா்: ஓட்டுநா் காயம்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



