பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

3-வது ஒருநாள்: ஷுப்மன் கில் சதம்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய இளம் வீரர் ஷுப்மன் கில் சதமடித்துள்ளார்.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2022, 10:34 am

DIN

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய இளம் வீரர் ஷுப்மன் கில் சதமடித்துள்ளார்.

மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் 38.1 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்பிறகு பேட்டிங் செய்த இந்திய அணி, 25.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

3-வது ஒருநாள் ஆட்டம் ஹராரேவில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் சிராஜ், பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக தீபக் சஹார், அவேஷ் கான் இடம்பெற்றுள்ளார்கள். ஜிம்பாப்வே அணியிலும் இரு மாற்றங்கள். 

கே.எல். ராகுலும் ஷிகர் தவனும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினார்கள். இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தார்கள். 46 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ராகுலும் 68 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஷிகர் தவனும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு ஷுப்மன் கில்லும் இஷான் கிஷனும் நல்ல கூட்டணியை அமைத்தார்கள். 51 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் அரை சதமெடுத்தார் இளம் வீரர் ஷுப்மன் கில். இந்திய அணி 35 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. 

61 பந்துகளில் அரை சதமெடுத்தார் இஷான் கிஷன். இது அவருடைய 2-வது ஒருநாள் அரை சதம். எனினும் 50 ரன்களில் ரன் அவுட் ஆகி அவர் வெளியேறினார். ஷுப்மன் கில்லும் இஷான் கிஷனும் 3-வது விக்கெட்டுக்கு 127 பந்துகளில் 140 ரன்கள் கூட்டணி அமைத்தார்கள். அடுத்து வந்த தீபக் ஹூடா 1 ரன்னில் இவான்ஸ் பந்தில் போல்ட் ஆனார். 82 பந்துகளில் தன்னுடைய முதல் ஒருநாள் சதத்தை எடுத்தார் ஷுப்மன் கில்.

இந்திய அணி, 44 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.