4-வது டி20 ஆட்டத்திலும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த இலங்கை அணி
மேக்ஸ்வெல் 48 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டி20 ஆட்டத்திலும் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.
ஏற்கெனவே 3 டி20 ஆட்டங்களையும் வென்று தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி, மெல்போர்னில் இன்று நடைபெற்ற 4-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்று ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
ஆஸி. அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத இலங்கை அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் நிஸ்சாங்கா அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார்.
இந்த இலக்கைச் சுலபமாக விரட்டியது ஆஸ்திரேலிய அணி. 18.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து 4-வது டி20 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. ஜோஷ் இங்லிஷ் 20 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். மேக்ஸ்வெல் 48 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 4-0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...