ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

கரோனாவிலிருந்து மீண்ட மெஸ்ஸி

பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி, கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :6 ஜனவரி 2022, 10:54 am

பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி, கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பார்சிலோனா அணியிலிருந்து விலகிய லியோனல் மெஸ்ஸி, பாரீஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் கிளப்பில் இணைந்தார். சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் விருதான பேலன் தோர் (Ballon d'Or) விருதை 7-வது முறையாக மெஸ்ஸி சமீபத்தில் வென்றார். 

இந்நிலையில் கரோனாவால் கடந்த வாரம் பாதிக்கப்பட்டார் மெஸ்ஸி. இதனால் ஜனவரி 4 அன்று நடைபெற்ற பாரீஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் அணியின் ஆட்டத்தில் அவர் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் மெஸ்ஸி உடல்நிலை பற்றிய சமீபத்திய தகவலை பாரீஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் கிளப் அறிவித்துள்ளது.

பரிசோதனையில் மெஸ்ஸிக்கு கரோனா இல்லை என உறுதியாகியுள்ளது. பாரிஸுக்கு அவர் வந்துவிட்டார். சில நாள்களில் அணியினருடன் இணைந்துவிடுவார் என்று பாரீஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் கிளப் அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.