நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஆஸி. ஓபன்: 4 மணி நேரம் போராடி அரையிறுதிக்கு முன்னேறிய நடால்

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் காலிறுதியில் கனடாவைச் சேர்ந்த டெனிஸ் ஷபோவலோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்...

News image
Updated On :25 ஜனவரி 2022, 5:29 pm IST

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் காலிறுதியில் கனடாவைச் சேர்ந்த டெனிஸ் ஷபோவலோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் பிரபல வீரர் நடால்.

கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை 20 முறையும் அதில் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை மட்டும் 13 முறையும் வென்றவர் நடால். கடந்த வருடம் விம்பிள்டன், யு.எஸ். ஓபன், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. 

இந்த வருடத்தின் முதல் தொடக்க கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் தற்போது அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் நடால். காலிறுதியில் தரவரிசையில் 14-ம் இடத்தில் உள்ள கனடாவைச் சேர்ந்த 22 வயது டெனிஸ் ஷபோவலோவுடன் மோதினார். மிகவும் பரபரப்பாக, 4 மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்ற ஆட்டத்தில்  6-3, 6-4, 4-6, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ஷபோவலோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் நடால். வயிற்று வலி காரணமாக 4-வது செட்டில் அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.