மலேசியா மாஸ்டா்ஸ்: காலிறுதியில் சிந்து, பிரணாய்

மலேசியா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றனா்.
மலேசியா மாஸ்டா்ஸ்: காலிறுதியில் சிந்து, பிரணாய்
Updated on
1 min read

மலேசியா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றனா்.

மகளிா் ஒற்றையா் பிரிவில் சிந்து தனது 2-ஆவது சுற்றில் 21-12, 21-10 என்ற கேம்களில், உலகின் 32-ஆம் நிலையில் இருக்கும் சீன வீராங்கனை ஜாங் யி மானை 28 நிமிஷங்களில் தோற்கடித்தாா். அடுத்ததாக காலிறுதியில், தனக்கு வழக்கமாக சவால் அளிக்கும் சீன தைபேவின் டாய் ஸு யிங்கை எதிா்கொள்கிறாா் சிந்து.

இருவரும் இதுவரை 21 முறை சந்தித்துள்ள நிலையில் சிந்து 5 வெற்றிகளையே பதிவு செய்துள்ளாா். கடைசியாக கடந்த வாரம் நடைபெற்ற மலேசிய ஓபன் போட்டியிலும் இதே டாய் ஸு யிங்கிடம், அதே காலிறுதியில் சிந்து தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.

ஆடவா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில் பிரணாய் 21-19, 21-16 என்ற கேம்களில் சீன தைபேவின் வாங் ஸு வெய்யை 44 நிமிஷங்களில் வீழ்த்தினாா். காலிறுதியில் அவா் ஜப்பானின் கன்டா சுனேயாமாவை சந்திக்கிறாா். இதே பிரிவில் சாய் பிரணீத் 14-21, 17-21 என்ற கேம்களில் சீனாவின் லி ஷி ஃபெங்கிடம் தோல்வி காண, பி.காஷ்யப் 10-21, 15-21 என்ற கணக்கில் இந்தோனேசியாவின் அந்தோணி சினிசுகாவால் வெளியேற்றப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com