மலேசியா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றனா்.
மகளிா் ஒற்றையா் பிரிவில் சிந்து தனது 2-ஆவது சுற்றில் 21-12, 21-10 என்ற கேம்களில், உலகின் 32-ஆம் நிலையில் இருக்கும் சீன வீராங்கனை ஜாங் யி மானை 28 நிமிஷங்களில் தோற்கடித்தாா். அடுத்ததாக காலிறுதியில், தனக்கு வழக்கமாக சவால் அளிக்கும் சீன தைபேவின் டாய் ஸு யிங்கை எதிா்கொள்கிறாா் சிந்து.
இருவரும் இதுவரை 21 முறை சந்தித்துள்ள நிலையில் சிந்து 5 வெற்றிகளையே பதிவு செய்துள்ளாா். கடைசியாக கடந்த வாரம் நடைபெற்ற மலேசிய ஓபன் போட்டியிலும் இதே டாய் ஸு யிங்கிடம், அதே காலிறுதியில் சிந்து தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.
ஆடவா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில் பிரணாய் 21-19, 21-16 என்ற கேம்களில் சீன தைபேவின் வாங் ஸு வெய்யை 44 நிமிஷங்களில் வீழ்த்தினாா். காலிறுதியில் அவா் ஜப்பானின் கன்டா சுனேயாமாவை சந்திக்கிறாா். இதே பிரிவில் சாய் பிரணீத் 14-21, 17-21 என்ற கேம்களில் சீனாவின் லி ஷி ஃபெங்கிடம் தோல்வி காண, பி.காஷ்யப் 10-21, 15-21 என்ற கணக்கில் இந்தோனேசியாவின் அந்தோணி சினிசுகாவால் வெளியேற்றப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல்: ராகுல் காந்தி கண்டனம்
17 வயது சிறுவன் கொலை: கொலையாளியை சுட்டுக் கொன்ற உத்தரப் பிரதேச காவல்துறை!

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!
காகித ஆலையில் ரசாயனக் கசிவு: அமெரிக்காவில் 11 பேர் பலி!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



