உலகத் தடகள சாம்பியன்ஷிப்: இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்ற இந்திய வீராங்கனை

இந்தியாவின் அன்னு ராணி, மகளிர் ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.
உலகத் தடகள சாம்பியன்ஷிப்: இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்ற இந்திய வீராங்கனை
Published on
Updated on
1 min read

உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அன்னு ராணி, மகளிர் ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் நடைபெறும் உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் ஈட்டி எறிதல் விளையாட்டின் தகுதிச்சுற்று இன்று நடைபெற்றது. ஈட்டி எறிதலில் தேசிய சாதனை நிகழ்த்தியுள்ள இந்தியாவின் அன்னு ராணி, தனது கடைசி வாய்ப்பில் 59.60 மீ. தூரம் ஈட்டியை எறிந்தார். இதனால் 8-ம் இடம் பிடித்த அன்னு ராணி, முதல் எட்டு இடங்களைப் பிடித்த வீராங்கனைகளில் ஒருவராக இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்தார்.

2019-ல் தோஹாவில் நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்ற அன்னு ராணி, 8-ம் இடம் பிடித்தார். சமீபத்தில் 63.82 மீ. தூரம் எறிந்து தேசிய சாதனை நிகழ்த்திய அன்னு ராணி, இறுதிச்சுற்றில் இன்னும் சிறப்பாகத் தனது திறமையை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம். 

நாளை (வெள்ளி) ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா, ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்கிறார். இந்திய நேரம் காலை 5.35 மணிக்குப் போட்டி தொடங்கவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com