தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

ஆஸ்திரேலியாவில் டி20 போட்டியில் விளையாடவுள்ள சிஎஸ்கே வீரர்

இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் திட்டத்தை சென்னையைச் சேர்ந்த எம்.ஆர்.எஃப். நிறுவனத்துடன் இணைந்து...

News image

முகேஷ் செளத்ரி

Updated On :22 ஜூலை 2022, 4:49 pm IST

ஐபிஎல் 2022 போட்டியில் கவனம் பெற்ற முகேஷ் செளத்ரி (சிஎஸ்கே), சேதன் சக்காரியா ஆகிய இருவரும் ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெறும் டி20 போட்டியில் விளையாடவுள்ளார்கள். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த முகேஷ் செளத்ரி, சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் 13 ஆட்டங்களில் 16 விக்கெட்டுகள் எடுத்தார். 2021-ல் ஐபிஎல் போட்டியில் அறிமுகமான சேதன் சக்காரியா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி 14 ஆட்டங்களில் 14 விக்கெட்டுகள் எடுத்தார். இந்த வருடம் தில்லி கேபிடல்ஸ் அணிக்காக 3 ஆட்டங்களில் மட்டும் விளையாடினார். 

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாந்தில் நடைபெறும் கேஎஃப்சி டி20 மேக்ஸ் சீரீஸ் போட்டியில் முகேஷ் செளத்ரியும் சேதன் சக்காரியாவும் விளையாடவுள்ளார்கள். மேலும் இருவரும் பிரிஸ்பேன் மைதானத்தில் பயிற்சியும் பெறவுள்ளார்கள். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் திட்டத்தை சென்னையைச் சேர்ந்த எம்.ஆர்.எஃப். நிறுவனத்துடன் இணைந்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா மேற்கொள்கிறது. அத்திட்டத்தின் வழியாகவே முகேஷ் செளத்ரியும்  சேதன் சக்காரியாவும் ஆஸ்திரேலியாவில் விளையாடும் வாய்ப்பைத் தற்போது பெற்றுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.