தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

துப்பாக்கி சுடுதல்: ஸ்வப்னிலுக்கு வெள்ளி

அஜா்பைஜானில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில் குசேலுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

News image
Updated On :2 ஜூன் 2022, 9:15 pm

DIN

அஜா்பைஜானில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில் குசேலுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. உலகக் கோப்பை போட்டியில் தனிநபா் பிரிவில் ஸ்வப்னிலுக்கு இது முதல் பதக்கமாகும்.

ஆடவருக்கான 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய ஸ்வப்னில், அதில் 10-16 என்ற புள்ளிகள் கணக்கில் உக்ரைனின் சொ்ஹி குலிஷிடம் வெற்றியை இழந்து 2-ஆம் இடம் பிடித்தாா்.

தற்போது ஸ்வப்னில் வென்ற பதக்கத்தையும் சோ்த்து, இப்போட்டியின் பதக்கப் பட்டியலில் வியாழக்கிழமை நிலவரப்படி இந்தியா 1 தங்கம், 1 வெள்ளியுடன் 5-ஆவது இடத்தில் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.