அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

10 வருடங்களாக இதுவே என் கனவாக இருந்தது: தினேஷ் கார்த்திக்

இந்திய அணியிலிருந்து பலமுறை நீக்கப்பட்டாலும் ஒவ்வொருமுறையும்...

News image
Updated On :17 ஜூன் 2022, 11:17 am

DIN

ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடும்போதெல்லாம் இந்திய அணிக்காக விளையாடுவதே என்னுடைய லட்சியமாக இருந்தது என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியதால் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், இந்திய அணிக்கு மீண்டும் தேர்வாகியுள்ளார். பிசிசிஐக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. அணியில் அருமையான சூழல் நிலவுகிறது. கடந்த மூன்று வருடங்களாக வெளியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அணியில் விளையாடுவது எவ்வளவு சிறப்பானது என எண்ணுவேன். இப்போது அணியில் இடம்பிடித்து, இங்கிருக்கும் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ்கிறேன். 

இந்திய அணியிலிருந்து பலமுறை நீக்கப்பட்டாலும் ஒவ்வொருமுறையும் அணிக்கு மீண்டும் திரும்பவே விரும்பினேன். ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடும்போதெல்லாம் அந்த எண்ணம் தான் என்னை இயக்கியது. இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பது என்னுடைய கனவு. கடந்த பத்து வருடங்களாக அந்தக் கனவுதான் என்னைத் தொடர்ந்து இயக்கி வந்தது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.