வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

மலேசிய ஓபன்: காலிறுதியில் பிரணாய், சிந்து

 மலேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், பி.வி.சிந்து ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

News image
Updated On :1 ஜூலை 2022, 5:40 am IST

 மலேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், பி.வி.சிந்து ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

ஆடவா் ஒற்றையரில், போட்டித்தரவரிசையில் இல்லாத பிரணாய் 2-ஆவது சுற்றில் 21-15, 21-7 என்ற கேம்களில் உலகின் 4-ஆம் நிலை வீரரான சீன தைபேவின் சௌ டியென் சென்னை வீழ்த்தி அசத்தினாா். காலிறுதியில் பிரணாய், இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியை சந்திக்கிறாா்.

இதே பிரிவில் மற்றொரு இந்தியரான பி.காஷ்யப் 19-21, 10-21 என்ற கேம்களில் தாய்லாந்தின் குன்லாவத் விதித்சாரணிடம் வீழ்ந்தாா்.

மகளிா் ஒற்றையரில், உலகின் 7-ஆம் நிலை வீராங்கனையான சிந்து 19-21, 21-9, 21-14 என்ற கேம்களில் தாய்லாந்தின் பித்தாயபான் சாய்வானை தோற்கடித்தாா். அரையிறுதியில் அவா், சீன தைபேவின் டாய் ஸு யிங்கை எதிா்கொள்கிறாா்.

ஆடவா் இரட்டையா் பிரிவில் களம் கண்ட சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி இணையில் சாத்விக்கிற்கு லேசான காயம் ஏற்பட்டதால், 2-ஆவது சுற்றுடன் இந்திய கூட்டணி விலகியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.