அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அரையிறுதியில் இங்கிலாந்து: வங்கதேசம் படுதோல்வி

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேசத்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :27 மார்ச் 2022, 6:52 am

DIN


மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேசத்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

மகளிர் உலகக் கோப்பை லீக் சுற்றின் மிக முக்கியமான கட்டத்தில் இங்கிலாந்து, வங்கதேச அணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மோதின. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்குத் தகுதி பெற முடியும் என்ற நிர்பந்தத்தில் களமிறங்கிய இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

சோஃபியா டன்க்லேவின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய வங்கதேசம், இங்கிலாந்து பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 48 ஓவர்களில் 134 ரன்களுக்கு வங்கதேசம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன்மூலம், 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே மற்றொரு ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால், அரையிறுதிக்கு முன்னேறும். இல்லையெனில் 7 புள்ளிகளுடன் மேற்கிந்தியத் தீவுகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.