அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தினேஷ் கார்த்திக்கா, ரிஷப் பந்தா?: ரோஹித் சர்மா பதில்

தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பந்த் ஆகிய இருவரில் யாரைத் தேர்வு செய்வீர்கள்...

News image
ரிஷப் பந்த்
Updated On :9 நவம்பர் 2022, 6:30 am

DIN

தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பந்த் ஆகிய இருவரில் யாரைத் தேர்வு செய்வீர்கள் என்கிற கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் குரூப் 2 பிரிவில் முதல் இடம் பிடித்து அரையிறுதிக்குத் தகுதியடைந்துள்ளது இந்திய அணி. அரையிறுதிக்கு இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் தகுதி பெற்றுள்ளன. இன்று, சிட்னியில் நடைபெறும் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. நாளை (வியாழன்) அடிலெய்டில் நடைபெறவுள்ள 2-வது அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

இந்நிலையில் அரையிறுதி ஆட்டம் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பந்த் ஆகிய இருவரில், நான் முன்பே கூறியது போல, இந்தப் போட்டியில் ரிஷப் பந்துக்கு மட்டும் தான் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடினார். அதற்குப் பிறகு அவர் விளையாடவில்லை. அதனால் தான் ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட வைத்தோம். அதற்குக் காரணம், அரையிறுதி அல்லது இறுதிச்சுற்றில் அவர் விளையாடுவதாக இருந்தால் அதற்குத் தயாராக இருக்க வேண்டும். திடீரென ஒரு வீரரை முக்கியமான ஆட்டத்தில் விளையாட வைக்க முடியாது. அரையிறுதியில் நியூசிலாந்து அல்லது இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களைச் சமாளிக்க ரிஷப் பந்த் உதவுவார். எனவே தான் முந்தைய ஆட்டத்தில் விளையாட வாய்ப்பளித்தோம். அதேசமயம், அரையிறுதிக்கான இந்திய அணித் தேர்வில் என்ன முடிவெடுப்போம் எனத் தெரியாது. இரு விக்கெட் கீப்பர்களும் தேர்வுக்கான போட்டியில் உள்ளார்கள் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.