தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மகளிர் ஆசியக் கோப்பை: 8-வது முறையாக இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்த இந்தியா

மகளிர் ஆசியக் கோப்பை அரையிறுதிச் சுற்றில் தாய்லாந்தை எளிதாக வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளது இந்திய அணி.

News image
ஷெஃபாலி வர்மா
Updated On :13 அக்டோபர் 2022, 6:06 am

DIN


மகளிர் ஆசியக் கோப்பை அரையிறுதிச் சுற்றில் தாய்லாந்தை எளிதாக வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளது இந்திய அணி.

சில்ஹட்டில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை அரையிறுதிச் சுற்றில் இந்தியா - தாய்லாந்து ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற தாய்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய மகளிர் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. ஷெஃபாலி வர்மா 42, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் 36 ரன்கள் எடுத்தார்கள். தாய்லாந்து அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் மட்டுமே எடுத்து 74 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

மகளிர் ஆசியக் கோப்பை இறுதிச்சுற்றுக்கு 8-வது முறையாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. இன்று நடைபெறும் மற்றொரு அரையிறுதிச் சுற்றில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதவுள்ளன. இறுதிச்சுற்று சனிக்கிழமையன்று நடைபெறவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.