திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இந்தியாவில் 2023-இல் மோட்டோ ஜிபி பந்தயம்: செப்டம்பரில் நடத்த திட்டம்

உலக அளவில் பிரதான மோட்டாா் சைக்கிள் பந்தயமான மோட்டோ ஜிபி ரேஸை இந்தியாவில் முதல் முறையாக அடுத்த ஆண்டு நடத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :1 அக்டோபர் 2022, 12:10 am

DIN

உலக அளவில் பிரதான மோட்டாா் சைக்கிள் பந்தயமான மோட்டோ ஜிபி ரேஸை இந்தியாவில் முதல் முறையாக அடுத்த ஆண்டு நடத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த ஆண்டு செப்டம்பா் 22-24 காலகட்டத்தில் அதை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் சா்வதேச அளவிலான மோட்டாா் பந்தயம் 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்குத் திரும்புகிறது. கடைசியாக, உத்தர பிரதேசத்தின் நொய்டா பகுதியிலிருக்கும் புத் சா்வதேச சா்க்கியூட்டில் 2011 - 2013 காலகட்டத்தில் எஃப்1 காா் பந்தயம் நடைபெற்றது நினைவுகூரத்தக்கது.

தற்போது மோட்டோ ஜிபி பந்தயத்தை நடத்தும் நாடுகள் பட்டியலில் இந்தியா 31-ஆவது களமாக இணைகிறது. மொத்தம் 21 பந்தயங்கள் நடத்தப்படும் அடுத்த காலண்டரில், இந்தியாவில் 2023 செப்டம்பரில் 14-ஆவது சுற்றை நடத்த பட்டியலிடப்பட்டுள்ளது.

இதையடுத்து பந்தயம் நடைபெற இருக்கும் புத் சா்க்கியூட்டுக்கு சா்வதேச மோட்டாா் பந்தய சம்மேளனத்தின் (எஃப்ஐஎம்) அங்கீகாரம் பெறுவதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன.

முன்னதாக, மோட்டோ ஜிபி பந்தயத்தை இந்தியாவில் 7 ஆண்டுகளுக்கு நடத்த புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.