இஷான் கிஷன் (கோப்புப் படம்)
இஷான் கிஷன் (கோப்புப் படம்)

3வது போட்டியில் இந்தியா பேட்டிங்: இஷான் அதிரடி தொடக்கம்!

இந்தியா - வங்கதேசம் மோதும் 3வது மற்றும் கடைசியான ஒருநாள் போட்டியில் இந்தியா அணி பேட்டிங்.
Published on

இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் சனிக்கிழமை காலை 11.30 மணிக்குத் தொடங்கியது.

3வது போட்டியில் வங்கதேசம் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி கலமிறங்கியது. இஷான் கிஷன், குல்தீப் அணியில் இடம்பெற்றுள்ளனர். ரோஹித் காயம் காரணமாக இடம்பெறவில்லை. ஏற்கனவே வங்கதேசம் இந்த தொடரில் 2-0 என முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

ஷிகர் தவான் 3 ரன்னில் ஆட்டமிழந்தாலும் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 50 ரன்களை கடந்துள்ளார். 15 ஓவர் முடிவில் இந்திய அணி 85 ரன்கள் 1 விக்கெட். இஷான் கிஷன் 54 ரன்கள், விராட் கோலி 16 ரன்களுடன் களத்தில் இருக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com