தென்னாப்பிரிக்காவில் ஏமாற்றமளித்த அஸ்வின் பந்துவீச்சு: ஆகாஷ் சோப்ரா

அஸ்வின் பந்துவீச்சில் ஓரளவு ஏமாற்றமடைந்துள்ளேன். அஸ்வினிடம் நிறைய எதிர்பார்த்தேன்.
தென்னாப்பிரிக்காவில் ஏமாற்றமளித்த அஸ்வின் பந்துவீச்சு: ஆகாஷ் சோப்ரா
Published on
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்று அசத்தியுள்ளது தென்னாப்பிரிக்க அணி.

டெஸ்ட் தொடரில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சுமாராகப் பந்துவீசி, 3 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். ஜடேஜாவுக்குக் காயம் ஏற்பட்டதால்  டெஸ்ட் தொடரிலிருந்து அவர் விலகினார். இதையடுத்து மூன்று டெஸ்டுகளிலும் விளையாடிய அஸ்வின், 64.1 ஓவர்களை வீசினார். 

35 வயது அஸ்வினின் பந்துவீச்சு பற்றி தன்னுடைய யூடியூப் சேனலில் இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியதாவது:

அஸ்வின் பந்துவீச்சில் ஓரளவு ஏமாற்றமடைந்துள்ளேன். அஸ்வினிடம் நிறைய எதிர்பார்த்தேன். அவர் ஏதாவது செய்வார், ஜொகன்னஸ்பர்க், கேப் டவுன் என எந்த ஆடுகளமாக இருந்தாலும் இன்னும் அதிகமாகப் பங்களிப்பார் என நினைத்தேன். சுழற்பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளமாக இல்லையென்றாலும் பந்துவீச்சில் சுத்தமாகப் பங்களிப்பே இல்லை. நான்காவது இன்னிங்ஸில் விக்கெட் எடுக்காதது அணிக்குச் சாதகமான நிலையைத் தரவில்லை. பேட்டிங்கில் ஒருமுறை ரன்கள் எடுத்தார். மற்றபடி எல்லா நேரங்களிலும் அஸ்வின் ரன்கள்  எடுப்பதில்லை. வெளிநாடுகளில் பேட்டிங்கைக் கொண்டு தேர்வு செய்வதாக இருந்தால் அணியில் அஸ்வினுக்குப் பதிலாக ஜடேஜா தேர்வாகவேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com