நேற்றைய டெஸ்ட் போட்டியில் சதமடித்த ரிஷப் பந்த் 17 வருட தோனியின் சாதனையை முறியடித்து சாதனைப் படைத்துள்ளார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 89 பந்துகளில் சதமடித்தார். இதற்கு முன்னர் இந்தியாவின் விக்கெட் கீப்பர்களில் மகேந்திர சிங் தோனி 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 93பந்தில் சதமடித்து முன்னிலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கிலாந்து மண்ணில் 2 சதமடித்த முதல் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் சாதனைப் படைத்துள்ளார்.
ரிஷப் பந்த் 146 ரன்களுக்கு ஜோ ரூட் பந்தில் ஆட்டமிழந்தார். இந்தியா அணி ஒரு நாள் ஆட்ட முடிவில் 338 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்துள்ளது. ஜடேஜா 83 ரன்களுடனும் ஷமி ரன்னேதும் எடுக்காமலும் முதல் நாள் ஆட்டத்தை முடித்தனர்.