நேற்றைய டெஸ்ட் போட்டியில் சதமடித்த ரிஷப் பந்த் 17 வருட தோனியின் சாதனையை முறியடித்து சாதனைப் படைத்துள்ளார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 89 பந்துகளில் சதமடித்தார். இதற்கு முன்னர் இந்தியாவின் விக்கெட் கீப்பர்களில் மகேந்திர சிங் தோனி 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 93பந்தில் சதமடித்து முன்னிலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கிலாந்து மண்ணில் 2 சதமடித்த முதல் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் சாதனைப் படைத்துள்ளார்.
ரிஷப் பந்த் 146 ரன்களுக்கு ஜோ ரூட் பந்தில் ஆட்டமிழந்தார். இந்தியா அணி ஒரு நாள் ஆட்ட முடிவில் 338 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்துள்ளது. ஜடேஜா 83 ரன்களுடனும் ஷமி ரன்னேதும் எடுக்காமலும் முதல் நாள் ஆட்டத்தை முடித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரை, சிவகங்கை ஆட்சியர்கள் உள்பட பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!







