தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

ஜிம்பாப்வேயில் ஒருநாள் தொடரை விளையாடும் இந்திய அணி

இந்திய அணி அடுத்த மாதம் ஜிம்பாப்வேவுக்குச் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது.

Published On :1 பிப்ரவரி 2024, 3:15 pm IST

இந்திய அணி அடுத்த மாதம் ஜிம்பாப்வேவுக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.

இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இதன்பிறகு இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இந்தச் சுற்றுப்பயணம் ஆகஸ்ட் 7 அன்று முடிவடைகிறது. 

இந்நிலையில் இந்திய அணியின் அடுத்தச் சுற்றுப்பயணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 27 முதல் இலங்கையில் நடைபெறும் ஆசியக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக ஜிம்பாப்வேவுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது.

ஜிம்பாப்வே கிரிக்கெட் சங்கம் தரப்பிலிருந்து தெரிவித்த தகவலின்படி இந்திய அணி, ஜிம்பாப்வேயில் ஆகஸ்ட் 18, ஆகஸ்ட் 20, ஆகஸ்ட் 22 ஆகிய தேதிகளில் மூன்று ஒருநாள் ஆட்டங்களையும் விளையாடவுள்ளது. 

இந்தத் தொடரில் பல இந்திய இளம் வீரர்கள் பங்கேற்பார்கள், விவிஎஸ் லக்‌ஷ்மண் அணியின் பயிற்சியாளராக இருப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.