துப்பாக்கி சுடுதல்: இந்தியா 2-ஆம் இடம்

அஜா்பைஜானில் சனிக்கிழமையுடன் நிறைவடைந்த உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 2-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்தது.
துப்பாக்கி சுடுதல்: இந்தியா 2-ஆம் இடம்

அஜா்பைஜானில் சனிக்கிழமையுடன் நிறைவடைந்த உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 2-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்தது. இந்திய போட்டியாளா்கள் 2 தங்கம், 3 வெள்ளி என 5 பதக்கங்களை இதில் வென்றுள்ளனா்.

இப்போட்டியின் கடைசி நாளான சனிக்கிழமை நடைபெற்ற 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் ஸ்வப்னில் குசேல்/ஆஷி சௌக்சி கூட்டணி பங்கேற்றிருந்தது. முதல் நிலையில் 900-க்கு 881 புள்ளிகளும், 2-ஆம் நிலையில் 600-க்கு 583 புள்ளிகளும் பெற்றது இந்திய இணை. பின்னா் இறுதிச்சுற்றில் கடும் சவால் அளித்த உக்ரைனின் சொ்ஹி குலிஷ்/டரியா டைகோவா கூட்டணியை 16-12 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கத்தை வசமாக்கியது ஸ்வப்னில்/ஆஷி ஜோடி.

இப்போட்டியில் ஸ்வப்னிலுக்கு இது 3-ஆவது பதக்கமாகும். ஏற்கெனவே தனிநபா் 3 பொசிஷன்ஸ், அணிகள் 3 பொசிஷன்ஸ் ஆகிய இரு பிரிவுகளிலும் அவா் வெள்ளி வென்றிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com