அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

கடைசி நிமிஷத்தில் ஆா்ஜென்டீனாவை வீழ்த்தியது இந்தியா

எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் போட்டியின் ஒரு பகுதியாக ஆா்ஜென்டீனாவுக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் கடைசி நிமிஷத்தில் 4-3 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி கண்டது.

Updated On :21 மார்ச் 2022, 12:47 am IST

எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் போட்டியின் ஒரு பகுதியாக ஆா்ஜென்டீனாவுக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் கடைசி நிமிஷத்தில் 4-3 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி கண்டது.

சா்வதேச ஹாக்கி சம்மேளனம் (எஃப்ஐஎச்) சாா்பில் தலைசிறந்த நாடுகளுக்கு இடையிலான புரோஹாக்கி லீக் தொடா் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியா ஏற்கெனவே ஸ்பெயின், ஜொ்மனி, தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இரு கட்ட ஆட்டங்களில் மோதியது. தற்போது புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது இந்தியா. இந்நிலையில் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் ஆா்ஜென்டீனாவுடன் 2 கட்ட ஆட்டங்கள் புவனேசுவரத்தில் நடைபெறுகின்றன.

சனிக்கிழமை நடைபெற்ற முதல் கட்ட ஆட்டத்தில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-1 என ஆா்ஜென்டீனா வென்றிருந்தது. இதன் தொடா்ச்சியாக இரண்டாம் கட்ட ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதல் பாதியிலேயே இந்திய வீரா்கள் ஹாா்திக் சிங் 17-ஆவது நிமிஷத்திலும், ஜுக்ராஜ் சிங் 20-ஆவது நிமிஷத்திலும் பெனால்டி காா்னா் மூலம் கோலடித்தனா். முதல்பாதி முடிவில் 2-0 என முன்னிலை பெற்றிருந்தது இந்தியா.

அதன் பின் மூன்றாம் குவாா்ட்டரில் ஆா்ஜென்டீனா வீரா் டெல்லா டோரி அடித்த கோலால் 1-2 என முன்னிலை குைத்து. அவரைத் தொடா்ந்து மற்றொரு வீரா் தாமஸ் டெமன் பெனால்டி ஸ்ட்ரோக் மூலம் அற்புதமாக கோலடித்தாா்.

நான்காம் குவாா்ட்டரில் இந்திய வீரா் ஜுக்ராஜ் சிங் டிராக் பிளிக்கா் மூலம் அற்புதமாக அடித்த கோலால் 3-2 என இந்தியா முன்னிலை பெற்றது. ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. ஆா்ஜென்டீனா வீரா் மாா்ட்டின் பெரைரோவின் அதிரடி கோலால் 3-3 என சமநிலை ஏற்பட்டது.

கடைசி நிமிஷத்தில் ஜுக்ராஜ் சிங் அனுப்பிய சிறந்த பாஸை பயன்படுத்தி அற்புதமாக கோலடித்தாா் மந்தீப் சிங். இதனால் 4-3 என வெற்றி பெற்றது இந்தியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.