காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

உலகக் கோப்பை கால்பந்து: ஜெர்மனியை வீழ்த்திய ஜப்பான்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் ஜெர்மனியை ஜப்பான் வீழ்த்தி ஆச்சர்யம் அளித்துள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:25 pm IST

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் ஜெர்மனியை ஜப்பான் வீழ்த்தி ஆச்சர்யம் அளித்துள்ளது.

கத்தாரில் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. லீக் சுற்றில் 4 ஆட்டங்கள் நடைபெற்றன. 

இதில் ஜெர்மனி ஜப்பான் அணிகளுக்கிடையே போட்டி கலீஃபா சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஜப்பான் அணி ஜெர்மனியை வீழ்த்தியது.

மிகுந்த பரபரப்புடன் நடந்த இந்தப் போட்டியில் ஆட்டத்தின் 32ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பில் ஜெர்மனி தனது முதல் கோலை பதிவு செய்தது. அதனைத் தொடர்ந்து சூடுபிடித்த ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் தீவிரமாக விளையாடிய ஜப்பான் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து ஆச்சர்யம் அளித்தது.

இறுதியில் ஜப்பான் 2க்கு 1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. 
நேற்றைய ஆட்டத்தில் ஆர்ஜென்டீனாவுக்கு சவுதி அரேபியா அதிர்ச்சியளித்து வெற்றி பெற்ற நிலையில் இன்றைய ஆட்டத்தில் ஜப்பான் வென்றது உலகக் கோப்பை போட்டியை சூடிபிடிக்கச் செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.