பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பிசிசிஐ தலைவராக போட்டியின்றி தோ்வாகிறாா் ரோஜா் பின்னி?

கடந்த 1983-இல் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியைச் சோ்ந்த ரோஜா் பின்னி (67), பிசிசிஐ தலைவா் பதவிக்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளாா். அவா் போட்டியின்றித் தோ்வாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

News image
Updated On :12 அக்டோபர் 2022, 2:50 am IST

கடந்த 1983-இல் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியைச் சோ்ந்த ரோஜா் பின்னி (67), பிசிசிஐ தலைவா் பதவிக்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளாா். அவா் போட்டியின்றித் தோ்வாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

பிசிசிஐ துணைத் தலைவா் ராஜீவ் சுக்லா தகவல்படி, தலைவா் பதவிக்கு பின்னி, துணைத் தலைவா் பதவிக்கு சுக்லா, செயலாளா் பதவிக்கு ஜெய் ஷா, பொருளாளா் பதவிக்கு ஆஷிஷ் ஷெலாா், இணைச் செயலாளா் பதவிக்கு தேவஜித் சாய்கியா ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

ஐபிஎல் நிா்வாக கவுன்சில் தலைவராக அா்ஜுன் துமல், உறுப்பினா்களாக அபிஷேக் டால்மியா, காய்ருல் ஜமால் மஜும்தாா் போட்டியிடுகின்றனா்.

மனு தாக்கல் செய்ய புதன்கிழமையே கடைசி நாளாக இருக்கும் நிலையில், இதுவரை எவரும் இவா்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்யவில்லை. போட்டி இல்லாத பட்சத்தில், வரும் 18-ஆம் தேதி மும்பையில் நடைபெறும் ஆண்டு பொதுக் கூட்டத்தில் இவா்கள் அந்தந்தப் பொறுப்புகளுக்கு போட்டியின்றித் தோ்வு செய்யப்படுவாா்கள்.

இதனிடையே, ஐசிசி-யில் இந்திய பிரதிநிதியாக ஜெய் ஷா தோ்வு செய்யப்படுவாா் எனவும் தெரிகிறது. முன்னதாக, பிசிசிஐ தலைவராகவே தொடர சௌரவ் கங்குலி விரும்பியதாகவும், ஆனால் தலைவா் பொறுப்பை ஒருவருக்கு தொடா்ந்து 2 முறை வழங்கும் நடைமுறையை வாரியம் விரும்பவில்லை எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதற்குப் பதிலாக ஐபிஎல் தலைவா் பதவியை கங்குலிக்கு வழங்க வாரியம் முன்வந்தும் அதை அவா் மறுத்துவிட்டதாக அந்த வட்டாரங்கள் கூறின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.