கடந்த 1983-இல் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியைச் சோ்ந்த ரோஜா் பின்னி (67), பிசிசிஐ தலைவா் பதவிக்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளாா். அவா் போட்டியின்றித் தோ்வாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
பிசிசிஐ துணைத் தலைவா் ராஜீவ் சுக்லா தகவல்படி, தலைவா் பதவிக்கு பின்னி, துணைத் தலைவா் பதவிக்கு சுக்லா, செயலாளா் பதவிக்கு ஜெய் ஷா, பொருளாளா் பதவிக்கு ஆஷிஷ் ஷெலாா், இணைச் செயலாளா் பதவிக்கு தேவஜித் சாய்கியா ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
ஐபிஎல் நிா்வாக கவுன்சில் தலைவராக அா்ஜுன் துமல், உறுப்பினா்களாக அபிஷேக் டால்மியா, காய்ருல் ஜமால் மஜும்தாா் போட்டியிடுகின்றனா்.
மனு தாக்கல் செய்ய புதன்கிழமையே கடைசி நாளாக இருக்கும் நிலையில், இதுவரை எவரும் இவா்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்யவில்லை. போட்டி இல்லாத பட்சத்தில், வரும் 18-ஆம் தேதி மும்பையில் நடைபெறும் ஆண்டு பொதுக் கூட்டத்தில் இவா்கள் அந்தந்தப் பொறுப்புகளுக்கு போட்டியின்றித் தோ்வு செய்யப்படுவாா்கள்.
இதனிடையே, ஐசிசி-யில் இந்திய பிரதிநிதியாக ஜெய் ஷா தோ்வு செய்யப்படுவாா் எனவும் தெரிகிறது. முன்னதாக, பிசிசிஐ தலைவராகவே தொடர சௌரவ் கங்குலி விரும்பியதாகவும், ஆனால் தலைவா் பொறுப்பை ஒருவருக்கு தொடா்ந்து 2 முறை வழங்கும் நடைமுறையை வாரியம் விரும்பவில்லை எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அதற்குப் பதிலாக ஐபிஎல் தலைவா் பதவியை கங்குலிக்கு வழங்க வாரியம் முன்வந்தும் அதை அவா் மறுத்துவிட்டதாக அந்த வட்டாரங்கள் கூறின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனியார் பெயரில் கோயிலின் ரூ.100 கோடி நிலம்: ஊழலில் பின்னால் இருக்கும் பவர்சென்டர் யார்? - இபிஎஸ் கேள்வி!







