இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் நீண்ட கால அரசி எலிசபெத் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானாா். அவருக்கு வயது 96. எலிசபெத் மறைவு காரணமாக லண்டனில் நடைபெற்று வரும் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்டின் 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. டெஸ்ட் குறித்த அடுத்த தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த டெஸ்டில் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 3-வது டெஸ்ட் தொடர்ந்து நடைபெறுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது குறித்து இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா ஆகிய இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இணைந்து முடிவெடுக்கவுள்ளன.
இந்நிலையில் ட்விட்டரில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது: அவருக்கு (எலிசபெத்) விளையாட்டு பிடிக்கும். அவருடைய நினைவாக டெஸ்டில் விளையாடுவதை கெளரவமாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.
டெஸ்ட் தொடர் 1-1 எனத் தற்போது சமனில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம்!

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


