சிஎஸ்கே- லக்னௌ அணிகளின் போட்டி தேதி மாற்றம்! 

மே மாதம் 4ஆம் தேதி நடைபெறவிருந்த லக்னௌ-சிஎஸ்கே அணிகளின் போட்டி தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
கோப்புப் படம் ( சிஎஸ்கே அணி, லக்னௌ அணி)
கோப்புப் படம் ( சிஎஸ்கே அணி, லக்னௌ அணி)
Updated on
1 min read

மே 1ஆம் தேதி லக்னௌ அணி ஆர்சிபியுடன் மோதுகிறது. அடுத்து மே.4 ஆம் தேதி சிஎஸ்கே அணியுடன் விளையாடவதாக இருந்தது. பின்னர் அந்த தேதியில் மாநகராட்சி தேர்தல் இருப்பதால் மே.3ஆம் தேதியே சிஎஸ்கே அணியுடன் மோதுமென பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் லக்னௌ அணிக்கு மே.1ஆம் தேதி விளையாடிவிட்டு ஒரே நாள்தான் ஓய்வு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மே.3ஆம் நாள் மாலை 3.30 மணிக்கு சிஎஸ்கே-லக்னௌ அணிகள் அடல் பிஹாரி வாஜ்பாயி மைதானத்தில் விளையாட உள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் லக்னௌ அணியும். 3வது இடத்தில் சிஎஸ்கே அணியும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com