கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற உலகக் கோப்பை டி20 அரையிறுதி போட்டிக்குப் பிறகு இதுவரை ரோஹித் சர்மா ஒரு டி20 போட்டியில் கூட விளையாடவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான அந்தப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியை சந்தித்தது. அந்தத் தோல்வியின் மூலம் உலகக் கோப்பைக் கனவும் தகர்ந்தது. அதன்பின், இந்திய அணியை டி20 போட்டிகளில் ஹார்திக் பாண்டியா தற்போது வரை வழிநடத்தி வருகிறார். இதற்கிடையில், ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, தீபக் ஹூடா ஆகிய இளம் வீரர்கள் பேட்டிங்கில் கலக்கி வருகிறார்கள். ரோஹித் சர்மாவைப் போலவே விராட் கோலியும் இங்கிலாந்துடன் ஏற்பட்ட அரையிறுதி தோல்விக்குப் பின் இன்னும் இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் விளையாடவில்லை.