நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஆடவர், மகளிர் ஜூனியர் ஹாக்கி அணிக்கு புதிய பயிற்சியாளர்!

ஹெர்மன் குரூயிஸ் 2006 முதல் 2010 வரை நெதர்லாந்து ஹாக்கி அணிக்கு பயிற்சியாளராக இருந்தவர். இவரின் தலைமையின்கீழ் ஐரோப்பா கோப்பையை நெதர்லாந்து அணி வென்றுள்ளது. 

News image

கோப்புப் படம்

Updated On :8 ஆகஸ்ட் 2023, 8:18 pm IST

இந்திய ஜூனியர் ஹாக்கி அணிக்கு ஹெர்மன் குரூயிஸ் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

அதன்படி இவர் இந்திய ஜூனியர் ஹாக்கி அணியின் மகளிர் மற்றும் ஆடவர் அணிக்கு பயிற்சி அளிக்கவுள்ளார். 

ஹெர்மன் குரூயிஸ் 2006 முதல் 2010 வரை நெதர்லாந்து ஹாக்கி அணிக்கு பயிற்சியாளராக இருந்தவர். இவரின் தலைமையின்கீழ் ஐரோப்பா கோப்பையை நெதர்லாந்து அணி வென்றுள்ளது. 

ஆண்கள் ஜூனியர் ஹாக்கி அணி டிசம்பர் 5 முதல் 16ஆம் தேதி வரை மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் பங்கேற்கவுள்ளது. 

இதேபோன்று மகளிர் ஜூனியர் ஹாக்கி அணி நவம்பர் 29 முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை சிலி நாட்டில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் பங்கேற்கவுள்ளது. 

இந்த இரு தொடர்களையொட்டி இரு அணிகளுக்கும் ஹெர்மன் குரூயிஸ் பயிற்சி அளிக்கவுள்ளார். அடுத்த 4 மாதங்களுக்கு இந்திய ஜூனியர் ஹாக்கி அணிக்கு நெருக்கடியான காலமாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.