12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

மூன்று போட்டிகளில் இரண்டு சதங்கள்: லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அசத்தும் புஜாரா!

இந்திய அணியின் புஜாரா லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அவர் விளையாடிய கடைசி 3 போட்டிகளில் இரண்டு சதங்கள் அடித்து அசத்தியுள்ளார்.

படம் |ட்விட்டர்

Published On :

இந்திய அணியின் புஜாரா லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அவர் விளையாடிய கடைசி 3 போட்டிகளில் இரண்டு சதங்கள் அடித்து அசத்தியுள்ளார்.

இந்திய அணியின் புஜாரா இங்கிலாந்தில் நடைபெறும் ராயல் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறார். இந்தத் தொடரில் நேற்றையப் போட்டியில் சோமர்செட் மற்றும் சசெக்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய சோமர்செட் 50 ஓவர்கள் முடிவில் 318 ரன்கள் குவித்தது. இதனையடுத்து, 319 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சசெக்ஸ் அணி 11 பந்துகள் மீதமிருக்க இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சசெக்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய வீரர் புஜாரா 113 பந்துகளில் 117 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

புஜாரா கடந்த மூன்று போட்டிகளில் இரண்டாவது முறையாக சதம் அடித்து அசத்தியுள்ளார். முன்னதாக நடைபெற்ற போட்டிகளில் அவர் 23 ரன்கள், 106 ரன்கள் மற்றும் 56 ரன்கள் குவித்துள்ளார். 

புஜாரா கடைசியாக இந்திய அணிக்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடினார். அதன்பின் அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் புஜாரா அணியில் சேர்க்கப்படாதது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.