காயத்திலிருந்து குணமடைந்து அணிக்கு திரும்பியது குறித்து மனம் திறந்த ஸ்ரேயாஸ் ஐயர்!

காயத்திலிருந்து குணமடைந்து இந்திய அணிக்கு திரும்பியுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்குத் திரும்பியுள்ளது குறித்து மனம் திறந்துள்ளார்.
காயத்திலிருந்து குணமடைந்து அணிக்கு திரும்பியது குறித்து மனம் திறந்த ஸ்ரேயாஸ் ஐயர்!

காயத்திலிருந்து குணமடைந்து இந்திய அணிக்கு திரும்பியுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்குத் திரும்பியுள்ளது குறித்து மனம் திறந்துள்ளார்.

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக இந்த ஆண்டு முழுவதும் பெரிய அளவில் எந்த ஒரு போட்டியிலும் இடம் பெறவில்லை. இன்னும் சில நாட்களில் இந்திய அணி ஆசியக் கோப்பையில் விளையாடவுள்ளது. அதன் பின்னர், அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் உலகக் கோப்பையில் சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் கனவோடு இந்திய அணி களமிறங்குகிறது. உலகக் கோப்பை தொடர் தொடங்க சில வாரங்களே உள்ள நிலையில், இந்திய அணியில் 4-வது இடத்தில் யார் களமிறங்கப் போகிறார்கள் என்ற கேள்வி பெரும் விவாதமானது. பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து குணமடைந்து இந்திய அணிக்கு  அணிக்குத் திரும்பியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

காயத்திலிருந்து குணமடைந்து அணிக்குத் திரும்பியுள்ள அவர் பிசிசிஐ-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சரியாக சொல்ல வேண்டுமென்றால் எனக்கு கால் சிறுவிரல் நரம்பில் காயம் ஏற்பட்டது. அந்த காயத்தினால் ஏற்பட்ட வலி தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு அதிகமானதாக இருந்தது. எனக்கு என்ன செய்கிறது என்பதைக் கூட என்னால் சரியாக கூற முடியவில்லை. அந்த அளவுக்கு வலி அதிகமாக இருந்தது. இந்த பிரச்னை எனக்கு நீண்ட நாள்களாக இருந்தது. நான் அதற்காக ஊசி போட்டுக் கொள்வேன். ஆனால், மருத்துவர்கள் என்னை அறுவை சிகிச்சை செய்து கொள்ள அறிவுறுத்தினார்கள். பின்னர், அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வெடுத்தேன். தற்போது முழுமையாக குணமடைந்து அணிக்குத் திரும்புவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com