காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

ஆஸி. வீரரின் சிக்கல் தீர்ந்தது!

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது...

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 11:54 am IST

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர், பிப்ரவரி 9 முதல் தொடங்குகிறது. எந்தவொரு பயிற்சி ஆட்டத்திலும் விளையாடாமல் முதல் டெஸ்டில் களமிறங்குகிறது ஆஸி. அணி.

முதல் டெஸ்ட் நாகபுரியில் நடைபெறுகிறது. எனினும் பெங்களூரில் ஆரம்பக்கட்டப் பயிற்சிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது ஆஸ்திரேலிய அணி. உஸ்மான் கவாஜாவைத் தவிர ஆஸி. வீரர்களும் அனைவரும் நேற்று பெங்களூருக்கு வந்தார்கள். 

பிரபல பேட்டர் உஸ்மான் கவாஜா மட்டும் நுழைவு இசைவு (விசா) கிடைக்காத காரணத்தால் இந்தியாவுக்கு உடனடியாக வரமுடியாத சூழல் ஏற்பட்டது. விசாவுக்கான ஏற்பாடுகள் கடந்த மாதம் முதல் நடைபெற்று வந்தாலும் கவாஜாவுக்கு மட்டும் விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அவரில்லாமல் ஆஸி. அணி இந்தியாவுக்கு வந்தது. 

இந்நிலையில் கவாஜாவின் சிக்கல் தீர்ந்து, அவருக்கு விசா கிடைத்து விட்டது. இதையடுத்து சிட்னியிலிருந்து பெங்களூருக்கு இன்று வரவுள்ளார். விமானத்திலிருந்து ஒரு இன்ஸ்டகிராம் பதிவையும் கவாஜா வெளியிட்டுள்ளார். இதனால்  முதல் டெஸ்டில் தகுந்த பயிற்சியுடன் கவாஜா பங்கேற்பதில் எந்தவொரு சிக்கலும் தற்போது இல்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.