அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

டபிள்யூபிஎல்: ஏலம் நிறைவடைந்தது! 

மகளிா் ப்ரீமியா் லீக் (டபிள்யுபிஎல்) ஏலம் முடிவடைந்துள்ளது. 

News image
Updated On :13 பிப்ரவரி 2023, 6:21 pm

DIN

முதன்முதலாக மகளிா் ப்ரீமியா் லீக் (டபிள்யுபிஎல்) போட்டியை நடத்த பிசிசிஐ தீா்மானித்துள்ளது. மொத்தம் 5 அணிகள் இதில் இடம் பெறுகின்றன. இந்த அணிகளின் ஏலம் மூலம் பிசிசிஐக்கு ரூ.4,670 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதன் செயலாளா் ஜெய் ஷா கூறியுள்ளாா். கடந்த 2008-இல் ஆடவா் ஐபிஎல் தொடா் தொடங்கப்பட்ட போது கிடைத்த தொகையை விட இது அதிகம் ஆகும்.

டபிள்யூபிஎல் போட்டி மார்ச் 4 முதல் 26 வரை மும்பையில் உள்ள இரு மைதானங்களில் நடைபெறவுள்ளது. 22 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

டபிள்யூபிஎல் வீராங்கனைகளுக்கான ஏலத்தில் ஒவ்வொரு அணியும் 15 முதல் 18 வீராங்கனைகளைத் தேர்வு செய்து கொள்ளலாம். எனவே அதிகபட்சமாக 90 வீராங்கனைகள் தேர்வு செய்யப்படவுள்ளார்கள். ஒவ்வொரு அணியும் 6 வெளிநாட்டு வீராங்கனைகளைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

இன்று நடைபெற்ற ஏலத்தில் ஸ்மிருதி மந்தனா ஆர்சிபி அணிக்காக ரூ.3.42 கோடிக்கு தேர்வாகி முதலிடம் பிடித்தார். 

ஆர்சிபி: மொத்தம் 18 வீராங்கனைகள் தேர்வு. வெளிநாட்டு வீராங்கனைகள்: 6. இவ்வணியில் அதிகபட்ச தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர்: ஸ்மிருதி மந்தனா (ரூ.3.42 கோடி). மீதமுள்ள தொகை- ரூ.10 இலட்சம். 

மும்பை இந்தியன்ஸ்: மொத்தம் 18 வீராங்கனைகள் தேர்வு. வெளிநாட்டு வீராங்கனைகள்: 6. இவ்வணியில் அதிகபட்ச தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர் - நாட் சிவர்-பிரண்ட் - ரூ.3.2 கோடி. மீதமுள்ள தொகை- இல்லை. 

குஜராத் ஜெயண்ட்ஸ்: மொத்தம் 18 வீராங்கனைகள் தேர்வு. வெளிநாட்டு வீராங்கனைகள்: 6. இவ்வணியில் அதிகபட்ச தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர் - கார்ட்னர் - ரூ.2.6 கோடி. மீதமுள்ள தொகை-ரூ. 5 இலட்சம்.

உ.பி. வாரியஸ்: மொத்தம் 18 வீராங்கனைகள் தேர்வு. வெளிநாட்டு வீராங்கனைகள்: 6. இவ்வணியில் அதிகபட்ச தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர் -  தீப்தி சர்மா - ரூ.3.2 கோடி. மீதமுள்ள தொகை- இல்லை.

தில்லி கேபிடல்ஸ்: மொத்தம் 18 வீராங்கனைகள் தேர்வு. வெளிநாட்டு வீராங்கனைகள்: 6. இவ்வணியில் அதிகபட்ச தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர் -  ஜெமிமா ரோட்ரிகஸ் - ரூ.2.2 கோடி. மீதமுள்ள தொகை- ரூ.35 இலட்சம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.