ரஞ்சி கோப்பை: சௌராஷ்டிரம் அணி சாம்பியன்! 

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பெங்காலுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் சௌராஷ்டிரம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
ரஞ்சி கோப்பை: சௌராஷ்டிரம் அணி சாம்பியன்! 
Published on
Updated on
1 min read

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில்  முதல் இன்னிங்ஸில் பெங்கால் 174 ரன்களும், சௌராஷ்டிரம் அணி 404 ரன்களும் எடுத்தது.

2வது இன்னிங்ஸில் பெங்கால் 214 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. பெங்கால் அணியில் அதிகபட்சமாக மஜூம்ப்தார் 61 ரன்களும், கேப்டன் மனோஜ் திவாரி 68 ரன்களும் எடுத்தனர்.

2வது சௌராஷ்டிரா அணியின் கேப்டன் உனத்கட் 6 விக்கெட்டுகளையும் சேத்தன் சக்காரியா 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். 

அடுத்து 12 ரன்கள் இலக்குடன் விளையாடிய சௌராஷ்டிரா அணி 2.4 ஓவரில் 14 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

முதல் இன்னிங்ஸில் 81 ரன்கள் எடுத்த அர்பித் வஸவதா தொடர் நாயகனா தேர்வு செய்யப்பட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com