கனடா ஓபன்: அரையிறுதியில் பி.வி.சிந்து போராடி தோல்வி!

கனடா ஓபன் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கனடா ஓபன் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்துள்ளார்.

கனடாவின் கல்கரி நகரில் கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்தப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் காவோ பாங் ஜியுடன் மோதினார். அதில், அவர் 21-13, 21-7 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்றார். அதன்மூலம் அரையிறுதிக்கும் முன்னேறினார். அரையிறுதில் பி.வி.சிந்து, முதல்நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமாகுச்சியிடம் மோதுவதாக இருந்தது.

இந்த நிலையில் இன்று (ஜூலை 9) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகானே யமாகுச்சியிடம் 14-21, 15-21 என்ற செட் கணக்கில்  பி.வி.சிந்து தோல்வியைத் தழுவினார். 

முதல்நிலை விராங்கனையான  ஜப்பானின் அகானே யமாகுச்சியிடம் பி.வி.சிந்து போராடி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com