லீக் சுற்று முடிவில், கோவை மொத்தம் நடைபெற்ற 7 ஆட்டங்களில் 6 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது. நெல்லை 5 வெற்றிகளுடன் 3-ஆவது இடத்தில் இருந்தது.
பின்னா் குவாலிஃபயா் 1 ஆட்டத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி நேரடியாக இறுதி ஆட்டத்துக்கு வந்தது கோவை. மறுபுறம் நெல்லை அணி, எலிமினேட்டரில் மதுரையையும், பின்னா் குவாலிஃபயா் 2 ஆட்டத்தில் திண்டுக்கல்லையும் வெளியேற்றி இறுதிக்கு வந்தது.
இந்த எடிஷனில் கோவை தனது ஒரே தோல்வியை நெல்லையிடம் தான் கண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் பேட்டிங் ஆடிய கோவை அணி 20 ஓவர் முடிவில் 205/5 ரன்கள் எடுத்தது. இதில் சுரேஷ்குமார் (57), முகிலேஷ்( 51), அடீக் ரஹ்மான் (50) ஆகிய மூன்று பேர் அரைசதம அடித்துஅசத்தினர்.
அடுத்து ஆடிய நெல்லை ராயல் கிங்ஸ் அணி 15 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கோவை அணியில் சுப்ரமணியன் 4 விக்கெட்டுகளும் கேப்டன் ஷாருக்கான் 3 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினர். ஆட்ட நாயகன் விருது சுப்ரமணியனுக்கு வழங்கப்பட்டது.