இந்திய கிரிக்கெட் அணி 3 முறை ஐசிசி உலக்கோப்பையை வென்றுள்ளது. 1983இல் ஒருநாள் போட்டியிலும், 2007இல் டி20 உலகக் கோப்பையும், 2011இல் மீண்டும் ஒருநாள் கோப்பைகளையும் வென்றது. மேலும் 2013இல் தோனி தலைமையில் 2013இல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.
இந்திய அணி கடந்த 10 வருடமாக எந்த விதமான ஐசிசி கோப்பையையும் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாக் அவுட் போட்டிகள் வரை சென்றாலும் கோப்பையை வெல்ல முடியாத சோகம் நிலவி வருகிறது.

நாளை நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா வெல்லுமா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது:
ஐசிசி கோப்பை வெல்ல வேண்டுமென எங்களுக்கு எந்தவிதமான அழுத்தமும் இல்லை. வென்றால் நன்றாகத்தான் இருக்கும். இரண்டு வருட கடின உழைப்பிற்கு கிடைத்த பலனாக இந்த வெற்றி இருக்கும்.
ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவதும் டிரா செய்வதும் எளிமையான விஷயமில்லை. ஆஸி. அணி சிறப்பாக விளையாடி வருகிறது. கட்ந்த் 5,7 ஆண்டுகளாக இந்திய அணி எல்லோரிடமும் சிறப்பான போட்டியை விளையாடியுள்ளது. நீங்கள் ஐசிசி கோப்பை வைத்திருந்தாலும் வைக்காவிட்டாலும் இது எதுவும் மாறப்போவதில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


