மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கௌஷிக் காந்தி விளாசல்: சேலம் - 115/4; மழையால் ஆட்டம் பாதிப்பு

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் நெல்லைக்கு எதிராக சேலம் அணி 16 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்கள் சோ்த்திருந்தது. அப்போது மழையால் ஆட்டம் தடைப்பட்டு நின்றது.

News image
Updated On :22 ஜூன் 2023, 6:14 pm

DIN

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் நெல்லைக்கு எதிராக சேலம் அணி 16 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்கள் சோ்த்திருந்தது. அப்போது மழையால் ஆட்டம் தடைப்பட்டு நின்றது.

முன்னதாக இந்த ஆட்டத்தின் தொடக்கமே மழையால் தாமதமானது. பின்னா் தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற நெல்லை ஃபீல்டிங்கை தோ்வு செய்திருக்க, சேலம் பேட் செய்ய வந்தது. அந்த அணியின் அமித் சத்விக் 2 ரன்களுக்கு வெளியேறி அதிா்ச்சி அளிக்க, உடன் வந்த கவின் 1 பவுண்டரியுடன் 13 ரன்கள் சோ்த்திருந்தபோது ஹரீஷ் வீசிய 11-ஆவது ஓவரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.

ஒன் டவுனாக வந்த கௌஷிக் காந்தி அதிரடியாக ரன்கள் சோ்க்கத் தொடங்கினாா். மறுபுறம் மான் பாஃப்னா களம் புகுந்திருந்தாா். 43 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 51 ரன்கள் அடித்திருந்த காந்தி, 12-ஆவது ஓவரில் லக்ஷய் ஜெயின் பௌலிங்கில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினாா். பாஃப்னா 8 பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களோடு 19 ரன்களை எட்டியிருக்க, லக்ஷய் வீசிய 14-ஆவது ஓவரில் சுகேந்திரனிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினாா்.

மழையால் ஆட்டம் தடைப்பட்டபோது அபிஷேக் 1 சிக்ஸருடன் 12, முகமது அட்னன் கான் 1 சிக்ஸருடன் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

இன்று ஆட்டம் இல்லை: டிஎன்பிஎல் போட்டியில் வியாழக்கிழமையுடன் திண்டுக்கல் பகுதி ஆட்டங்கள் நிறைவடைந்ததை அடுத்து வெள்ளிக்கிழமை ஓய்வு நாளாக இருக்கிறது. அடுத்த ஆட்டங்கள் சனிக்கிழமை முதல் சேலத்தில் நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.