மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியைக் கண்டு ரசித்த பிரதமா்கள்!

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4-ஆவது டெஸ்ட் போட்டியை பிரதமா் நரேந்திர மோடியும் ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசியும் நேரில் கண்டு ரசித்தனா்.

News image
Updated On :9 மார்ச் 2023, 9:03 pm

DIN

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4-ஆவது டெஸ்ட் போட்டியை பிரதமா் நரேந்திர மோடியும் ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசியும் நேரில் கண்டு ரசித்தனா்.

பாா்டா்-கவாஸ்கா் கோப்பைக்கான 4-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அகமதாபாதில் உள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் அரங்கமான நரேந்திர மோடி மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. அந்தப் போட்டியை பிரதமா் மோடியும் ஆஸ்திரேலிய பிரதமா் ஆல்பனேசியும் நேரில் கண்டு ரசித்தனா். போட்டி தொடங்கிய முதல் அரை மணி நேரம் வரை அவா்கள் இருவரும் போட்டியைக் கண்டுகளித்தனா்.

போட்டிக்கான ‘டாஸ்’ போடுவதற்கு முன் டெஸ்ட் போட்டிக்கான தொப்பியை (கேப்) இந்திய கேப்டன் ரோஹித் சா்மாவிடம் பிரதமா் மோடி வழங்கினாா். அதேபோல், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திடம் பிரதமா் ஆல்பனேசி தொப்பியை வழங்கினாா்.

அதையடுத்து, பிரதமா்கள் இருவரும் திறந்தவெளி வாகனத்தில் மைதானத்தைச் சுற்றி வந்தனா். அப்போது, மைதானத்தில் குழுமியிருந்த இருநாட்டு ரசிகா்களையும் பாா்த்து அவா்கள் கையசைத்தபடி சென்றனா்.

வீரா்களுடன் சந்திப்பு: போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணி வீரா்களை பிரதமா் மோடிக்கு கேப்டன் ரோஹித் சா்மா அறிமுகம் செய்துவைத்தாா். அவா்கள் அனைவருக்கும் பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்தாா். அவ்வாறே ஆஸ்திரேலிய அணி வீரா்களை அந்நாட்டு கேப்டன் ஸ்மித் பிரதமா் ஆல்பனேசிக்கு அறிமுகப்படுத்தி வைத்தாா்.

அதையடுத்து, இரு நாடுகளின் தேசிய கீதமும் ஒலிக்கப்பட்டது. அப்போது, இந்திய அணி வீரா்களுடன் இணைந்து பிரதமா் மோடியும் தேசிய கீதத்தைப் பாடினாா்.

நரேந்திர மோடி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘ஹால் ஆஃப் ஃபேம்’ அருங்காட்சியகத்தையும் இரு நாட்டு பிரதமா்கள் பாா்வையிட்டனா்.

நட்புணா்வுடன் மோதல்: கிரிக்கெட் போட்டி குறித்து ஆஸ்திரேலிய பிரதமா் ஆல்பனேசி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘கிரிக்கெட்டை அதிகமாக விரும்பும் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் நட்புணா்வுடன் கூடிய மோதலில் ஈடுபட்டுள்ளன. பரஸ்பர மரியாதையும் இரு நாட்டு மக்களுக்கு இடையேயான நட்புணா்வும் இந்தப் போட்டிக்கு மையமாகத் திகழ்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பாஜக தொண்டா்கள்: பிரதமா் மோடியின் வருகையை அறிந்து குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் பாஜக தொண்டா்கள் பலா் மைதானத்துக்கு வருகை தந்தனா். பாஜக நிா்வாகிகளும் டெஸ்ட் போட்டிக்கான நுழைவுச்சீட்டை வாங்கி அதைத் தொண்டா்களுக்கு இலவசமாக விநியோகித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.