பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அஸ்வின், ஜடேஜாவுக்குத் தொடர் நாயகன் விருது பகிர்ந்தளிக்கப்பட்டது ஏன்?

டெஸ்ட் தொடரில் அஸ்வின் 25 விக்கெட்டுகளும் 86 ரன்களும் ஜடேஜா 22 விக்கெட்டுகளும் 135 ரன்களும் எடுத்துள்ளார்கள்.

News image
Updated On :13 மார்ச் 2023, 11:04 am

DIN

இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பங்கேற்ற டெஸ்ட் தொடரில் அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவருக்கும் தொடர் நாயகன் விருது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 

ஆமதாபாத்தில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் டிரா ஆனதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்றுள்ளது இந்திய அணி.

ஆமதாபாத் டெஸ்டில் சதமடித்த விராட் கோலி, ஆட்ட நாயகனாகத் தேர்வாகியுள்ளார். தொடர் நாயகன் விருது அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 

டெஸ்ட் தொடரில் அஸ்வின் 25 விக்கெட்டுகளும் 86 ரன்களும் ஜடேஜா 22 விக்கெட்டுகளும் 135 ரன்களும் எடுத்துள்ளார்கள். அஸ்வின் அதிக விக்கெட்டுகளை எடுத்திருந்தாலும் பேட்டிங்கில் ஜடேஜா ஓர் அரை சதமெடுத்துள்ளார். அஸ்வின் அதிகபட்சமாக தில்லி டெஸ்டில் 37 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் இருவரும் இந்திய அணிக்கு முடிந்தளவு உதவியிருக்கிறார்கள். 

டெஸ்ட் தொடரில் இருவரையும் பிரித்துப் பார்க்க முடியாதபடி ஆட்டத்திறனை நன்கு வெளிப்படுத்தியதால் இருவருக்கும் தொடர் நாயகன் விருது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக பரிசளிப்பு விழாவில் ஹர்ஷா போக்ளே தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.