ஐபிஎல் போட்டியின் 53-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை திங்கள்கிழமை தோற்கடித்தது.
முதலில் பஞ்சாப் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் சோ்க்க, அடுத்து ஆடிய கொல்கத்தா 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து வென்றது.
ஆண்ட்ரே ரஸ்ஸெலும் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 42 ரன்கள் விளாசி அதிரடி காட்டினாா். முடிவில் ரிங்கு சிங் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 21 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.
ஆட்ட நாயகன் விருது ஆண்ட்ரே ரஸ்ஸலுக்கு கிடைத்தது. இவர்தான் கொல்கத்தா அணிக்கு அதிகமுறை ஆட்டநாயகன் விருது வென்றதும் குறிப்பிடத்தக்கது.
கேகேஆர் அணிக்கு அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்றவர்கள்:
ஆண்ட்ரே ரஸ்ஸல்- 13
சுனில் நரைன் - 12
கௌதம் கம்பீர் - 10