கடந்த மாதம் 5-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டி, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.
டாஸ் வென்ற ஆஸி. பௌலிங் செய்து வருகிறது. இந்திய அணி 20 ஓவர் முடிவில் 115/3 ரன்கள் எடுத்துள்ளது.
இதையும் படிக்க: இறுதிப் போட்டியில் வான வேடிக்கை!
போட்டியின்போது பாதுகாப்பை மீறி பாலஸ்தீன ஆதரவாளர் ஒருவர் ஆடுகளத்தினுள் நுழைந்து விராட் கோலியை கட்டிப்பிடித்தார். பின்னர் பாதுகாவலர்களால் கைது செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
இதையும் படிக்க: இறுதிப்போட்டியை நேரில் காண வந்த தீபிகா படுகோன்!
கடந்த மாதம் 7-ஆம் தேதி காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது சுமாா் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசிய ஹமாஸ் குழுவினா், அந்த நாட்டுக்குள் அதிரடியாக ஊடுருவி 1,200 பேரை படுகொலை செய்தனா். இதில் மிகப் பெரும்பான்மையானவா்கள் பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஆவா்.
இதையும் படிக்க: கப்பை தூக்குறோம்: தமிழில் பேசி அசத்திய ஜடேஜாவின் வைரல் விடியோ!
இந்த கொடூரத் தாக்குதலைத் தொடா்ந்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட இஸ்ரேல் அரசு சூளுரைத்துள்ளது. அதற்காக காஸா பகுதியை ஒரு மாதத்துக்கும் மேல் முற்றுகையிட்டு மிகக் கடுமையாக குண்டு வீச்சு நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், தரைவழியாகவும் காஸாவுக்குள் நுழைந்து தாக்குல் நடத்தி வருகிறது.