ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 14-வது போட்டி லக்னெளவில் இன்று நடைபெறுகிறது. இதில், இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இதையும் படிக்க | பிரக்ஞானந்தாவுக்கு பரிசு வழங்கிய இஸ்ரோ தலைவர்!
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் குசல் மெண்டீஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகாவுக்கு வலது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியதால் குசல் மெண்டீஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நடப்பு தொடரில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் தாங்கள் விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இரு அணிகளும் தோல்வியில் இருந்து மீண்டு, வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் களமிறங்கியுள்ளன.