மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

பாகிஸ்தானின் சுழற்பந்துவீச்சு திறன்மிக்கதாக இல்லை: இஃப்திகார் அகமது

பாகிஸ்தானின் சுழற்பந்துவீச்சு திறன்மிக்கதாக இல்லாததே தொடர் தோல்விகளுக்கு காரணம் என அந்த அணியின் ஆல்ரவுண்டர் இஃப்திகார் அகமது தெரிவித்துள்ளார்.

News image
Updated On :24 அக்டோபர் 2023, 4:24 pm IST

பாகிஸ்தானின் சுழற்பந்துவீச்சு திறன்மிக்கதாக இல்லாததே தொடர் தோல்விகளுக்கு காரணம் என அந்த அணியின் ஆல்ரவுண்டர் இஃப்திகார் அகமது தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (அக்டோபர் 23) நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானின் தோல்வி அந்த அணியின் ஹாட்ரிக் தோல்வியாகும்.

இந்த நிலையில், பாகிஸ்தானின் சுழற்பந்துவீச்சு திறன்மிக்கதாக இல்லாததே தொடர் தோல்விகளுக்கு காரணம் என அந்த அணியின் ஆல்ரவுண்டர் இஃப்திகார் அகமது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: நான் மற்றும் முகமது நவாஸ் உள்பட எங்களது அணியில் சுழற்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், எங்களது சுழற்பந்துவீச்சாளர்களின் செயல்பாடு சிறப்பானதாக இல்லை. ஆனால், எங்களை முன்னேற்றிக் கொள்ள தொடர்ந்து முயற்சி செய்வோம். அதைத்தான் தற்போது எங்களால் செய்ய முடியும். உண்மையில் இந்த மைதானத்தில் 300 ரன்களுக்கும் அதிகமாக ரன்கள் குவிக்க வேண்டும். ஆனால், ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் எங்களைக் கட்டுப்படுத்திவிட்டார்கள். பேட்டிங்கில் நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். பீல்டிங்கின் போது நாங்கள் நிறைய தவறுகள் செய்துவிட்டோம். நாங்கள் எங்களை மேலும் சிறப்பாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.