நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மறைந்த கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடியை நினைவுகூறும் இந்திய அணி!

மறைந்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடியின் நினைவாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் கைகளில் கருப்புப் பட்டை அணிந்து களமிறங்குகின்றனர்.

News image
Updated On :29 அக்டோபர் 2023, 9:53 am

DIN

மறைந்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடியின் நினைவாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் கைகளில் கருப்புப் பட்டை அணிந்து களமிறங்குகின்றனர்.

உலகக் கோப்பையில் லக்னௌவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்கிறது. இந்தப் போட்டியில் மறைந்த பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடியினை நினைவுகூறும் விதமாக இந்திய வீரர்கள் அனைவரும் தங்களது  கைகளில் கருப்புப்பட்டை அணிந்து களமிறங்குகின்றனர்.

இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் தெரிவித்திருப்பதாவது: இன்றையப் போட்டியில்  மறைந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடியின் நினைவாக இந்திய வீரர்கள் அவர்களது கைகளில் கருப்புப் பட்டைகள் அணிந்து விளையாடுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அணியின் முன்னாள் வீரரும், சுழற்பந்துவீச்சு ஜாம்பாவானுமான பிஷன் சிங் பேடி அண்மையில் உடல்நலக் குறைவு காரணாமாக காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.