ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான இலங்கையை எளிதாக வீழ்த்தி அபார வெற்றியுடன் ஞாயிற்றுக்கிழமை வாகை சூடியது.
இதன் மூலம் 8-ஆவது முறையாக கோப்பை வென்று, போட்டியின் வரலாற்றில் அதிகமுறை சாம்பியன் ஆன அணியாக நீடிக்கிறது. இதற்கு முன் 1984, 1988, 1990-91, 1995, 2010, 2016, 2018 ஆகிய எடிஷன்களில் இந்தியா கோப்பை வென்றுள்ளது.
இதையும் படிக்க: இந்திய அணிக்காக தியாகம் செய்த தோனி: கம்பீர் புகழாரம்!
இந்திய தரப்பில் முகமது சிராஜ் அசத்தலாக பௌலிங் செய்து 6 விக்கெட்டுகள் சாய்த்து ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இஷான் கிஷன் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான விராட் கோலி போல நடந்து காட்டிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இஷானின் நடிப்பை விராட் கிண்டல் செய்வதும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினை பெற்று வருகிறது.
இதையும் படிக்க: 8-ஆவது முறையாக இந்தியா சாம்பியன்: இலங்கையை சரித்தாா் சிராஜ்
அடுத்து இந்திய அணி ஆஸி. அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதற்கடுத்து நேரையாக உலகக் கோப்பை விளையாட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.