திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

இந்திய அணிக்காக தியாகம் செய்த தோனி: கம்பீர் புகழாரம்!

இந்திய அணி கோப்பை வெல்ல வேண்டும் என்பதற்காக கடைசி வரிசையில் களமிறங்கி மகேந்திர சிங் தோனி தியாகம் செய்துள்ளதாக முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :18 செப்டம்பர் 2023, 1:20 pm IST

இந்திய அணி கோப்பை வெல்ல வேண்டும் என்பதற்காக கடைசி வரிசையில் களமிறங்கி மகேந்திர சிங் தோனி தியாகம் செய்துள்ளதாக முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற கம்பீர், தோனியின் பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

இந்த நிகழ்வில் பேசிய கம்பீர், “ஒரு போட்டியின் திசையை மாற்றக்கூடிய திறமை பெற்றிருந்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் தோனிதான். அவரை போன்ற பலம்வாய்ந்த ஒரு வீரர் பேட்டிங் வரிசையில் 7-வதாக பெற்றது இந்திய கிரிக்கெட் அணி பெற்ற வரம்.” எனத் தெரிவித்தார்.

மேலும், “தோனியின் தொடக்க காலங்களை போலவே அவர் பேட்டிங்கில் 3-வதாக களமிறங்கி இருந்தால், பல்வேறு ஒரு நாள் சாதனைகளை கண்டிபாக முறியடித்திருப்பார். பல சதங்களை அடித்திருப்பார். கேப்டன் பொறுப்பை ஏற்றதால் பேட்டிங் வரிசையில் 6, 7-வது இடத்தில் களமிறங்கி தனது பேட்டிங்கை தியாகம் செய்துள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.