ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் மும்பை கனமழை! முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து!த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?மேற்குவங்கம்: மாநிலங்களவையின் 3 இடங்களுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை! உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகனை, ட்ரோன் தாக்குதல்: 7 பேர் பலிதவெக கூட்டணியில் விசிக இடம்பெறும்! திருமாவளவன் அறிவிப்பு!ஓய்வை அறிவித்தார் பிரபல பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர்! நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டு அகற்றம்: திமுக கண்டனம்
/

ஆசிய விளையாட்டு: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய டென்னிஸ் ஜோடி!

டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது. 

News image
Updated On :27 செப்டம்பர் 2023, 8:32 pm IST

ஆசிய விளையாட்டுப் போட்டியில் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார் - சகேத் இணை அரையிறுதிக்கு முன்னேறியது. 

சீனாவில் செப். 23 ஆம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அக். 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில், இன்று (செப். 27) நடைபெற்ற டென்னிஸ் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் - சகேத் மைனேனி இணை சீனாவைச் சேர்ந்த யீபிங் வூ - ஸின் ஸென்ஜாங் இணையுடன் மோதியது. 

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இந்திய இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் 6-1, 7-6 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது. இதன்மூலம் அரையிறுதிக்கு இந்திய இணை முன்னேறியுள்ளது. இதனால் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.