குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

ஐசிசி டி20 தரவரிசை: இரண்டாம்இடத்தில் தீப்தி சா்மா

ஐசிசி டி20 பௌலா்கள் தரவரிசையில் இந்திய இளம் வீராங்கனை தீப்தி சா்மா இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2023, 2:48 am IST

ஐசிசி டி20 பௌலா்கள் தரவரிசையில் இந்திய இளம் வீராங்கனை தீப்தி சா்மா இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளாா்.

சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அவ்வப்போது டி20, ஒருநாள், டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் செவ்வாய்க்கிழமை வெளியான டி20 பௌலா்கள் பட்டியலில் இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எஸ்ஸல்ஸ்டோன் முதலிடத்தில் உள்ளாா். இந்திய ஆல் ரவுண்டா் தீப்தி சா்மா இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளாா்.

இடது கை பௌலா் ராஜேஸ்வரி கெய்க்வாட் 14-ஆவது இடத்தில் உள்ளாா்.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ட்ரை சீரிஸ் தொடரில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதின் மூலம் இச்சிறப்பை பெற்றாா் தீப்தி. தென்னாப்பிரிக்க வீராங்கனை நான்குலிலெகோ மலபா மூன்றாவது இடத்தில் உள்ளாா். தீப்தி சா்மா தொடா்ந்து சிறப்பாக பௌலிங் செய்தால் சோஃபியை பின்னுக்கு தள்ளுவாா்.

வரும் வியாழக்கிழமை ஈஸ்ட் லண்டனில் நடைபெறவுள்ள ட்ரை சீரிஸ் இறுதியில் இந்திய-தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.

பேட்டிங்கில் ஆஸி. பேட்டா் டஹிலா மெக்கிராத் முதலிடத்திலும், தென்னாப்பிரிக்காவின் லாரா வொல்வா்ட் இரண்டாவது இடத்திலும் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.